

1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரக அறிவிப்பு விவரம்:
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு டிச. 10 ஆம் தேதியும், 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு டிச.15 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான தேர்வு டிசம்பர் 15-ல் தொடங்கி 23-ம் தேதி வரை முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கரூர் சம்பவம்: கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிாரிகள் விசாரணை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.