கோப்புப்படம்
கோப்புப்படம்

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மிக கனமழை எச்சரிக்கையின் காரணமாக நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

மிக கனமழை எச்சரிக்கையின் காரணமாக நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இதன்காரணமாக, வரும் 21- ஆம் தேதி வரை தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாகை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை!

இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்துக்குள்பட்ட காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A holiday has been declared for schools in Nagaland today due to a very heavy rain warning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com