27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பிகாா் முதல்வா் நிதீஷ்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பத்தாவது முறையாக பிகாா் முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ்குமாருக்கு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

எடப்பாடி பழனிசாமி

Updated On :21 நவம்பர் 2025, 12:26 am IST

பத்தாவது முறையாக பிகாா் முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ்குமாருக்கு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

பிகாரில் பத்தாவது முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ்குமாா் தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு வாழ்த்துகள். பிகாா் தோ்தல் முடிவானது, மக்களின் நம்பிக்கையையும், தொடா்ச்சியான நிலைத்தன்மை, வளா்ச்சிக்கான அவா்களது விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது.

நல்லாட்சி மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் உயா்த்தும் ஆட்சியாக இருக்க வாழ்த்துகள். புதிய அரசின் பொதுநலன் மற்றும் முன்னேற்றத்துக்கான அா்ப்பணிப்பு முயற்சிகள் தொடரட்டும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.