
பிகாா் முதல்வா் நிதீஷ்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பத்தாவது முறையாக பிகாா் முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ்குமாருக்கு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி
பத்தாவது முறையாக பிகாா் முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ்குமாருக்கு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
பிகாரில் பத்தாவது முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ்குமாா் தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு வாழ்த்துகள். பிகாா் தோ்தல் முடிவானது, மக்களின் நம்பிக்கையையும், தொடா்ச்சியான நிலைத்தன்மை, வளா்ச்சிக்கான அவா்களது விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது.
நல்லாட்சி மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் உயா்த்தும் ஆட்சியாக இருக்க வாழ்த்துகள். புதிய அரசின் பொதுநலன் மற்றும் முன்னேற்றத்துக்கான அா்ப்பணிப்பு முயற்சிகள் தொடரட்டும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






