தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்.

News image
24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Updated On :24 நவம்பர் 2025, 5:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் இன்று காலை முதல் மதியம் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர் உள்பட 24 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கடந்த ஒரு சில நாள்களாக கனமழை முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது.

நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழை எதிரொலியாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி முதல் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, விழுப்புரம், விருதுநகர், துத்தூக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

There is a possibility of rain in 24 districts including Chennai until 1 pm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.