

நெல்லை: நெல்லை மாவட்டத்திற்கு திங்கள்கிழமை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்திற்கு திங்கள்கிழமை மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதையடுத்து, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண் - 0462- 250 1070 மற்றும் அவசர உதவி கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலியாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், திருநெல்வேலி நகர மேலப்பாளையம் செல்லும் வழியில் உள்ள தாமிரபரணி நத்தம் பாலம் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றும், அவ்வழியாக யாரும் வர வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.