சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கரூர் சம்பவம்: சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை...

News image

சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த செந்தில்குமார்.

Updated On :26 நவம்பர் 2025, 1:32 pm IST

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்பட 5 பேர் புதன்கிழமை நேரில் ஆஜராகினர்.

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி சிபிஐ அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாள்களாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த இந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகர் ராகுல் காந்தி, கரூர் டெக்ஸ் தொழில் அதிபர் செந்தில்குமார், நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோகுலக்கண்ணன் மற்றும் ஓடுவந்தூர் தேசிய முற்போக்கு திராவிட கழக ஒன்றிய இணைச் செயலாளர் நவலடி ஆகியோரிடம் புதன்கிழமை காலை முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே நெரிசல் சம்பவத்தின் போது அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள், காவலர்கள், நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Karur stampede: CBI probes those who posted on social media, police inspector!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.