சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கரூர் சம்பவம்: சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை...

News image

சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த செந்தில்குமார்.

Updated On :26 நவம்பர் 2025, 1:32 pm IST

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்பட 5 பேர் புதன்கிழமை நேரில் ஆஜராகினர்.

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி சிபிஐ அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாள்களாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த இந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகர் ராகுல் காந்தி, கரூர் டெக்ஸ் தொழில் அதிபர் செந்தில்குமார், நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோகுலக்கண்ணன் மற்றும் ஓடுவந்தூர் தேசிய முற்போக்கு திராவிட கழக ஒன்றிய இணைச் செயலாளர் நவலடி ஆகியோரிடம் புதன்கிழமை காலை முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே நெரிசல் சம்பவத்தின் போது அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள், காவலர்கள், நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Karur stampede: CBI probes those who posted on social media, police inspector!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.