கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியல்...

News image
கோப்புப்படம்- EPS
Updated On :27 நவம்பர் 2025, 3:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய புயல் சின்னம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெற்று வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் கணிப்பில் தெரிவித்திருப்பதாவது:

“முன்பு கணிக்கப்பட்டதில் எந்த மாற்றங்களும் இல்லை. புயல் சின்னம், புயலாக மாறி சென்னை மற்றும் புதுவைக்கு மிக அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு அருகில் கரையைக் கடக்குமா? அல்லது கடலில் நீடிக்குமா? என்பது பின்னர் தெரியவரும்.

நவம்பர் 29

மிக கனமழை பெய்யும் பகுதிகள் - நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரி.

கனமழை பெய்யும் பகுதிகள் - தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், நாமக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி.

நவம்பர் 29 முதல் 30 வரை

மிக மழை பெய்யும் பகுதிகள் - சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு.

கனமழை பெய்யும் பகுதிகள் - திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை.

புயல் சின்னம் நகர்வதில் தாமதம் ஏற்பட்டால், மழை பெய்யும் நாள்களில் சிறிது மாற்றங்கள் இருக்கும். சென்னை மற்றும் புதுவைக்கு இடையே கரையைக் கடந்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் பெங்களூரு போன்ற உட்புறங்களிலும் மழை பெய்யும்.” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Districts likely to receive very heavy rain on Nov. 29 and 30!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.