எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரவக்குறிச்சியில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு, காதலன் தற்கொலை!

அரவக்குறிச்சி அருகே, காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

News image

தற்கொலை

Updated On :29 நவம்பர் 2025, 9:40 am

கரூர் : அரவக்குறிச்சி அருகே காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட காதலன் உயிரிழந்த நிலையில், கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி ரெங்கராஜ் நகரைச் சேர்ந்த அசோக்குமார் மகன் வசந்தகுமார்( 26). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

அதேப் பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாணவியின் வீட்டில் யாரும் இல்லை என அறிந்து, வசந்தகுமார் மாணவியின் வீட்டுக்குச் சென்று, பிளேடால் மாணவியை கழுத்தை அறுத்துவிட்டு, அவர் இறந்து விட்டார் எனக் கருதி அதே அறையில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் தெளிந்த நிலையில் எழுந்து, கதறி அழுதுள்ளார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியை ரத்த வெள்ளத்தில் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் உயிரிழந்த வசந்தகுமாரின் உடலைக் கைப்பற்றி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.