நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், கோடியக்கரை கடல் சனிக்கிழமை தொடர்ந்து சீற்றமாக காணப்படுகிறது.
இலங்கைக்கு அருகே நிலைகொண்ட புயலின் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் மழை தொடர்ந்து வருகிறது. வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு தரைக்காற்றுடன் சாரல் மழைப் பொழி, படிப்படியாக கனத்து தொடர் மழையாக நீடித்தது.

சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 145.6 மி. மீ, தலைஞாயிறு- 89.மி. மீ, கோடியக்கரை- 203. 4 மி. மீ மழை பதிவானது. சனிக்கிழமை காலை 8:30 முதல் மாலை 6 மணி வரை வேதாரண்யம் -76 மி. மீ, கோடியக்கரை -94 மி. மீ, தலைஞாயிறு -62 மி. மீ மழை பதிவானது.

கோடியக்கரையில் அதிக அளவு மழை பெய்த நிலையில், கோடியக்காடு கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம் அமைத்து உணவு வழங்கப்படுகிறது. கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்படுகிறது.

வேதாரண்யம் நகரத்தில் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்கிறது.

காந்திநகர், வேட்டவரன்காடு, மந்தித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலை, வடிகால், குடியிருப்புகளை சூழ்ந்து சுமார் 3 அடி தண்ணீர் தேங்கி மக்கள் வெளியேற முடியாத அளவில் பாதிக்கச் செய்துள்ளது.

இந்த பகுதியில் மீட்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதான வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரை செடிகள் வெள்ளநீர் வடிவதை தடுப்பதால் சம்பா நெல் வயல்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. அகஸ்தியம்பள்ளி உப்பளப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் கடல் போல காணப்படுகிறது.

சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு காற்றும் மழையும் ஓய்ந்து காணப்பட்ட நிலையில், அவ்வப்போது லேசான தூறல் இருந்து வந்தது. மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று கடலை நோக்கி வீசி வருகிறது.
Summary
The Kodiyakarai sea continued to be rough on Saturday, as heavy rain lashed the Vedaranyam area.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடியக்கரை: நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் மீட்பு; ஒருவர் மாயம்!

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: ஊருக்குள் புகுந்த கடல்நீா்

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

திம்பம் மலைப் பகுதியில் கனமழை
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



