புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேதாரண்யம் பகுதியில் தொடரும் கனமழை: கோடியக்கரையில் கடல் சீற்றம்

வேதாரண்யம் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், கோடியக்கரை கடல் சனிக்கிழமை தொடர்ந்து சீற்றமாக காணப்படுகிறது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 2:04 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், கோடியக்கரை கடல் சனிக்கிழமை தொடர்ந்து சீற்றமாக காணப்படுகிறது.

இலங்கைக்கு அருகே நிலைகொண்ட புயலின் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் மழை தொடர்ந்து வருகிறது. வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு தரைக்காற்றுடன் சாரல் மழைப் பொழி, படிப்படியாக கனத்து தொடர் மழையாக நீடித்தது.

Story image

சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 145.6 மி. மீ, தலைஞாயிறு- 89.மி. மீ, கோடியக்கரை- 203. 4 மி. மீ மழை பதிவானது. சனிக்கிழமை காலை 8:30 முதல் மாலை 6 மணி வரை வேதாரண்யம் -76 மி. மீ, கோடியக்கரை -94 மி. மீ, தலைஞாயிறு -62 மி. மீ மழை பதிவானது.

Story image

கோடியக்கரையில் அதிக அளவு மழை பெய்த நிலையில், கோடியக்காடு கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம் அமைத்து உணவு வழங்கப்படுகிறது. கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்படுகிறது.

Story image

வேதாரண்யம் நகரத்தில் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்கிறது.

Story image

காந்திநகர், வேட்டவரன்காடு, மந்தித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலை, வடிகால், குடியிருப்புகளை சூழ்ந்து சுமார் 3 அடி தண்ணீர் தேங்கி மக்கள் வெளியேற முடியாத அளவில் பாதிக்கச் செய்துள்ளது.

Story image

இந்த பகுதியில் மீட்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதான வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரை செடிகள் வெள்ளநீர் வடிவதை தடுப்பதால் சம்பா நெல் வயல்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. அகஸ்தியம்பள்ளி உப்பளப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் கடல் போல காணப்படுகிறது.

Story image

சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு காற்றும் மழையும் ஓய்ந்து காணப்பட்ட நிலையில், அவ்வப்போது லேசான தூறல் இருந்து வந்தது. மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று கடலை நோக்கி வீசி வருகிறது.

Summary

The Kodiyakarai sea continued to be rough on Saturday, as heavy rain lashed the Vedaranyam area.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.