கோப்புப் படம்
கோப்புப் படம்

இரவில் எங்கெல்லாம் மழை?

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு 38 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறித்து..
Published on

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு 38 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், கோவை, தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

Summary

rain chance for 38 districts of tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com