மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டிட்வா புயல்: 2 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ்!

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இல்லை...

News image

@ChennaiRmc

Updated On :30 நவம்பர் 2025, 1:12 pm

டிட்வா புயல் எதிரொலியாக அதி கனமழைப்பொழிவை எதிர்பார்த்து திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. முன்னதாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று(நவ. 30) அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.

இந்த நிலையில், டிட்வா புயல் வலுவிழந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. மேற்கண்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைப்பொழிவுக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Summary

Cyclone Titva: Red alert issued for 2 districts withdrawn!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.