டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

நெல் கொள்முதல் தொடர்பாக டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, கடலூர் உள்ளிட்ட காவரி படுகைப் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் வரும் நிதியாண்டுக்கான நெல் கொள்முதல் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனையின் போது கேட்டறிகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருவதால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவை குறித்தும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com