அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அவிநாசி: பட்டா வழங்கிய இடத்தில் உரிய அளவீடு செய்து தரக் கோரி போராட்டம்

பெருமாநல்லூர் அருகே காளிபாளையத்தில் பட்டா வழங்கிய இடத்தில் உரிய முறையில் அளவீடு செய்து தரக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ளனர்.

News image
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மக்கள்.
Updated On :3 அக்டோபர் 2025, 11:09 am

இணையதளச் செய்திப் பிரிவு

பெருமாநல்லூர் அருகே காளிபாளையத்தில் பட்டா வழங்கிய இடத்தில் உரிய முறையில் அளவீடு செய்து தரக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் ஒன்றியம், அவிநாசி வட்டம் காளிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வாரணாசி பாளையத்தில் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதி மக்கள் 27 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தை உரிய முறையில் அளவீடு செய்து தர வேண்டும் எனக் கோரி ஆதி திராவிட குடியிருப்பு பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவிநாசி வருவாய்த்துறையினர், அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் நாங்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கு அருகே பட்டா வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள எரியூட்டு மயானத்திற்கு அருகில் உள்ள மூன்று நபர்களின் பட்டா மட்டும், இடம் மாற்றி, அதே பகுதியில் தெற்கு புறத்தில் வழங்கலாம் என தெரிவித்தனர்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஆதிதிராவிடர் பகுதி மக்கள், தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ள இடத்திலேயே அளவீடு செய்து குடியேற வழிவகை செய்து தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டா இடத்தில் இருத்தரப்பினர் ஆட்சேபனையால் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Story image

summary

Public protest on Friday demanding proper measurement of the land granted under the Patta in kalipalayam near Perumanallur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.