
மதிமுக பொதுச்செயலர் வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக சளி மற்றும் இருமல் பிரச்னை காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனைத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோவின் மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில் அவர் தற்போது கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.