நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆற்காடு: கன்டெய்னர் லாரி - சொகுசு பேருந்து மோதி விபத்து! ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்

ஆற்காடு அருகே கண்டெய்னர் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்

News image

விபத்துக்குள்ளான பேருந்து

Updated On :5 அக்டோபர் 2025, 8:39 am IST

ஆற்காடு அருகே கண்டெய்னர் லாரியின் மீது சொகுசு பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் பலியானதுடன், 23 பேர் படுகாயமடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் கான்கிரீட் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் 25 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் பலியானார்; பேருந்தில் பயணித்த 23 பேர் படுகாயமடைந்தனர்.

ஆற்காடு அருகே உள்ள சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 25 பயணிகளை ஏற்றிக் கொண்டு, சொகுசு பேருந்து வந்து கொண்டிருந்தது.

அப்போது காஞ்சிபுரத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வீடு கட்டும் கான்கிரீட் சிமெண்ட் தூண்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது சொகுசு பேருந்து ஓட்டுநர் எதிர்பாராத விதமாக தூக்க கலக்கத்தின் காரணமாக வேகமாக மோதியதில் 23 பேர் பலத்த படுகாயமடைந்தனர். சொகுசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஹரிஷ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆற்காடு நகர போலீசார் காயமடைந்த 23 பேரை தனியார் மருத்துவமனை ஆற்காடு மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான சொகுசு பேருந்தை இருந்து கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி சரி செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Arcot: Private Bus collides with Container Lorry in accident; Bus Driver killed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.