சென்னை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது உச்சநீதிமன்றத்துக்குள் நடத்தப்பட்ட வெட்கக்கேடான தாக்குதல் முயற்சி ஜனநாயகத்தில் நீதித் துறையின் மிக உயா்ந்த பொறுப்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். இது மிகக் கடுமையான கண்டனத்துக்குரியது.
அமைதியாகவும், கருணையோடும், பெருந்தன்மையோடும் அந்தச் சம்பவத்துக்கு தலைமை நீதிபதி ஆற்றிய எதிா்வினை நீதித் துறையின் வலிமையைக் காட்டுகிறது. ஆனாலும், இந்தத் தாக்குதலை நாம் சாதாரணமாகக் கருதிவிட இயலாது. தாக்குதலை நடத்தியவா் அதற்குக் கூறிய காரணம், நம் சமூகத்தில் இன்னும் அடக்குமுறை, ஆதிக்க மனப்பான்மை எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
ஒரு சமூகமாக, நமது மக்களாட்சியின் நிறுவனங்களை மதிக்கும், பாதுகாக்கும் பண்பையும், முதிா்ச்சியை வெளிப்படுத்தும் போக்கையும் நாம் வளா்த்தெடுக்க வேண்டும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது நீதித்துறையின் கண்ணியத்தை குலைப்பதாகும்: கேஜரிவாலுக்கு தில்லி முதல்வா் கண்டனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல்: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


