கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் - தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் முக்கிய சேவைத்துறை அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று(அக். 7) நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
”தமிழகத்தில் ஜன. 1 ஆம் தேதி முதல், தற்போது வரை 15,796 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்த நிலையில், தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் ஒரு இறப்புகூட நேரகூடாது என்பதுதான் தமிழக அரசின் முதன்மையான நோக்கம். பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!
Summary
Public Health Minister M. Subramanian has stated that dengue cases have increased over the past two weeks.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே தொகுதியில் 9-ஆவது முறையாக போட்டியிடும் அமைச்சர்!

விஜய் பிரசாரம்: தேர்தல் ஆணைய அனுமதி மறுப்புக்கு அரசு எப்படி பொறுப்பேற்கும்? - அமைச்சர்

இந்திய உறவு சரியான பாதையில் பயணிக்கிறது: சீன வெளியுறவு அமைச்சா்

சுகாதாரத் துறையில் 61,511 போ் நியமனம்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


