ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் நிர்மல் குமாரை சாணார்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

News image
விஜய்யுடன் நிர்மல் குமார்.
Updated On :12 அக்டோபர் 2025, 9:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் நிர்மல் குமாரை சாணார்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

கரூர் துயரம் தொடர்பான வழக்கில் நீதிபதி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பதிவு வெளியிட்டதாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கைதான நிர்மல் குமாரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் கடந்த 27-ஆம் தேதி தவெக பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து தவெக பொதுச் செயலா் ஆனந்த், துணைப் பொதுச் செயலா் நிா்மல்குமாா் உள்ளிட்டோா் மீது கரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனையடுத்து அவர்கள் தலைமறைவாகினர். அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கெனவே இவ்வழக்கில் மாவட்டச் செயலர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

summary

The Shanarpatti police arrested the Dindigul District Secretary of the TVK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.