திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

வால்பாறையில் காட்டு யானை தாக்கி பாட்டி, பேத்தி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதி.

Updated On :13 அக்டோபர் 2025, 10:25 am IST

வால்பாறையில் காட்டு யானை தாக்கி பாட்டி, பேத்தி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அசலா என்ற தோட்டத் தொழிலாளியின் வீட்டை காட்டு யானை இடித்தது.

யானை இடிக்கும் சப்தத்தைக் கேட்டு வீட்டிலிருந்த அசலா, தனது பேத்தி ஹேமா ஸ்ரீயை தூக்கிக்கொண்டு முன்வாசல் வழியாக வெளியில் வந்தார்.

அப்போது காட்டு யானை பாட்டியையும் பேத்தியையும் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் ஆறு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானாள்.

உயிருக்குப் போராடிய அசலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்துவிட்டார்.

ஒரே நேரத்தில் பாட்டியும் பேத்தியும் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

In a heart-wrenching incident, a 55-year-old woman and her young granddaughter were trampled to death by a herd of wild elephants that strayed into a workers’ settlement near Valparai in Coimbatore district during the early hours of Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.