தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரூர் பலி: தமிழக அரசின் விசாரணை ஆணையம் தொடரும்: திமுக வழக்குரைஞர் வில்சன் பேட்டி

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக அரசு அமைத்த அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் தொடரும் என்று திமுக எம்பியும், வழக்குரைஞருமான வில்சன் தெரிவித்தார்.

News image

வழக்குரைஞர் வில்சன்

Updated On :13 அக்டோபர் 2025, 7:38 am

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக அரசு அமைத்த அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் தொடரும் என்று திமுக எம்பியும், வழக்குரைஞருமான வில்சன் தெரிவித்தார்.

தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய தவெக மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பியும், வழக்குரைஞருமான வில்சன் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அரசு அமைத்த விசாரணை ஆணையம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை.

யார் மீது தவறு, யாரால் நடந்தது என்பதை சொல்ல அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு உரிமை உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால் பாதிக்கப்பட்டோருக்கு எந்தப் பயனும் இல்லை. தவெக தரப்பு சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

சிபிஐ விசாரிக்கும் உத்தரவை இடைக்காலமாக நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது தெரிந்தால் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்யும். இறுதி உத்தரவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். உயர் நீதிமன்ற உத்தரவில் தமிழக அரசின் தலையீடு இல்லை.

உயர் நீதிமன்ற உத்தரவில் அரசு தலையிட்டதாக ஆதவ் கூறினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். வாய்க்கு வந்தபடி தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Summary

DMK MP and lawyer Wilson said that the Aruna Jagadeesan Commission of Inquiry set up by the Tamil Nadu government into the Karur stampede case will continue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.