புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரூர் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமல் மனு: உச்ச நீதிமன்றம் கருத்து

பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமல் மனு அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் உச்ச நீதிமன்றம் கருத்து...

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :13 அக்டோபர் 2025, 6:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயரில் வழக்கு தொடரப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அபிஷேக் சிங்வி, பாதிக்கப்பட்டவர்கள் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் மனு அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தை ஏமாற்றியிருப்பதாக முறையிட்டார்.

அவரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் எனத் தெரிவித்தனர்.

Summary

Petition filed without the knowledge of the victims in the Karur case: Supreme Court's opinion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.