கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலியானோருக்கு தமிழக சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கியவுடன், கடந்த 6 மாதங்களில் சட்டப்பேரவை உறுப்பினா், முன்னாள் உறுப்பினா்கள் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, கரூர் தவெக கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
மேலும், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சுதாகா் ரெட்டி, மறைந்த ஐஏஎஸ் அதிகாரி மருத்துவா் பீலா வெங்கடேசன் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இந்த இரங்கல் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று நாள் முழுவதும் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும் போது, முதல்முறையாக மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் புகைப்படங்கள் பேரவைத் திரையில் ஒளிபரப்பப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.