ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெல்லையில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலி

நெல்லையில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலியானார்.

News image
நெல்லையில்
Updated On :18 அக்டோபர் 2025, 10:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

நெல்லை: நெல்லையில் தொடர்ந்து பெய்து வந்த பலத்த மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த பெண் பலியானார்.

நெல்லையில் கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

அதேபோல் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சேரும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனிடையே மழை வடிநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் ஓடைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் பல இடங்களில் தேங்கியயுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் நெல்லை டவுண் மற்றும் சந்திப்பு சிந்து பூந்துறை பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்தன.

இந்த வீடுகளில் ஆள்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் இல்லை. இந்த நிலையில் நேற்றும் மழை தொடந்து பெய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து மேலப்பாளையம் பகுதியில் உள்ள குறிச்சி மருதுபாண்டியர் 1-வது தெருவில் வசித்து வரும் தளவாய் மகன் முத்தையா (55) என்பவரது வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது.

இதில் முத்தையாவின் தாய் மாடத்தியம்மாள் (75) என்பவர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவிலேயே மாடத்தியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.