விராலிமலை அருகே சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் சேவை பழுதடைந்ததால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் வாகன ஓட்டிகள் அவதியாடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விராலிமலை அடுத்து பூதகுடி சுங்கச்சாவடி உள்ளது.
இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. மேலும், நாளை(அக். 19) திபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாள்கள் என்பதால் ஒரே நேரத்தில் அதிக அளவில் வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தது.
இதனால், காலை முதலே போக்குவரத்து நெரிசலுடன் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து சென்ற வண்ணம் இருந்தது.
இதனால் சுங்கச்சாவடி பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
இந்நிலையில் நள்ளிரவு திடீரென பாஸ்ட் டேக் சேவை பழுதடைந்து சிறிது நேரம் வேலை செய்யவில்லை, இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
அதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் சுங்கச்சாவடி அதிகாரிகள் உடனடியாக பாஸ்டாக் சேவையை சரி செய்ததால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
இதையும் படிக்க: பிகாா்: ஆளும் தே.ஜ. கூட்டணி வேட்பாளா் வேட்புமனு நிராகரிப்பு
Summary
Motorists were left in a state of disarray as the fast-track service at the toll plaza near Viralimalai was disrupted, causing long queues of vehicles.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தா்கள்

சுங்கவரி சோதனைச் சாவடியில் ஒருவழிப்பாதை: வாகன ஓட்டிகள் அவதி

சி.என்.ஜி. எரிவாயு தட்டுப்பாடு : வேலூரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



