ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு...

News image
செம்பரம்பாக்கம் ஏரி
Updated On :22 அக்டோபர் 2025, 2:47 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகம் முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், புயல் சின்னம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிமுதல் வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது.

தற்போது ஏரிக்கு வரும் நீரின் அளவு 2,170 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் 24 அடி நீர்மட்டத்தில் 20.84 அடி நிரம்பியுள்ளது.

மேலும், நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது.

summary

Increase in water flow to Chembarambakkam Lake

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.