வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி, இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு உருவாகியிருக்கும் இரண்டாவது புயல் சின்னம் இதுவாகும்.
இந்த வாரத் தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்துக்கு இடையே வலுவிழந்து கரையைக் கடந்தது.
இந்த நிலையில், மீண்டும் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதால், அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Summary
A new low-pressure area has formed in the Bay of Bengal.
இதையும் படிக்க : ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல்

புயல் சின்னம்: அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


