திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!

திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
மிக கனமழை எச்சரிக்கை
மிக கனமழை எச்சரிக்கை
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(அக். 28) மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் மோந்தா, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக, திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Meteorological Department has issued an orange warning for very heavy rainfall in the Tiruvallur district today (Oct. 28).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com