தமிழ்நாட்டின் 35-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக 16 வயது இளம்பரிதி!
இந்தியாவின் 90-வது மற்றும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட் மாஸ்டருமான இளம்பரிதிக்கு உதயநிதி வாழ்த்து

ஏ.ஆர். இளம்பரிதி
X | Udhay Stalin

ஏ.ஆர். இளம்பரிதி
X | Udhay Stalin
போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் 35-வது மற்றும் இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராக ஏ.ஆர். இளம்பரிதி உருவெடுத்துள்ளார்.
இளம்பரிதிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், ``தமிழகத்துக்கு இந்திய சதுரங்கத்துக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் பெருமைக்குரிய தருணமாக இது அமைந்துள்ளது.
இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராரும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட் மாஸ்டருமான இளம்பரிதிக்கு வாழ்த்துகள்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாம்பியன் மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளியான இளம்பரிதி, தொடர்ந்து மேலும் பல வெற்றிகளைப் பெறவும் வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...