பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முதல்வராக்க முன்னாள் பிரதமர் நேரு விரும்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுடன் பேசுகையில், ``நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை. என்னிடம் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்றாலும், நேதாஜியின் தீவிர ஆதரவாளரான முத்துராமலிங்கத் தேவர் கூறியதால், நானும் அதனை நம்புகிறேன்.
முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கையில் ஒருபோதும் பொய் சொல்லவில்லை என்பதால், அவரது வார்த்தைகளை நான் நம்புகிறேன். அவர், தனது அரசியல் பயணத்திலும் ஆன்மிகப் பாதையைப் பின்பற்றினார், அதுவே அவரது சிறப்பு’’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், சுதந்திரப் போராட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் தியாகங்களைப் போற்றிய முன்னாள் பிரதமர் நேரு, முத்துராமலிங்கத் தேவரை முதல்வராக்கவும் விரும்பினார்.
இருப்பினும், முதல்வர் பதவியை மறுத்த முத்துராமலிங்கத் தேவர், நேதாஜிக்கு நீதி கிடைப்பதைத்தான் விரும்புவதாக நேருவிடம் கூறினார்’’ என்று சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Summary
Former PM Nehru wanted to make Muthuramalinga Thevar CM in recognition of his sacrifices to the freedom movement, Thevar had refused it: CP RadhaKrishnan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்களுக்கு சமவாய்ப்பு, தலைமைப் பதவி மூலம் உண்மையான வளா்ச்சி சாத்தியமாகும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

மருத்துவம் மக்களின் நம்பிக்கை: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

குடியரசு துணைத் தலைவா் நாளை இலங்கைக்கு பயணம்
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


