ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

முதல்வர் பதவியை மறுத்த முத்துராமலிங்கத் தேவர்: சி.பி. ராதாகிருஷ்ணன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முதல்வராக்க முன்னாள் பிரதமர் நேரு விரும்பினார் - குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

News image

முத்துராமலிங்கத் தேவர்

Updated On :30 அக்டோபர் 2025, 4:42 pm IST

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முதல்வராக்க முன்னாள் பிரதமர் நேரு விரும்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுடன் பேசுகையில், ``நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை. என்னிடம் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்றாலும், நேதாஜியின் தீவிர ஆதரவாளரான முத்துராமலிங்கத் தேவர் கூறியதால், நானும் அதனை நம்புகிறேன்.

முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கையில் ஒருபோதும் பொய் சொல்லவில்லை என்பதால், அவரது வார்த்தைகளை நான் நம்புகிறேன். அவர், தனது அரசியல் பயணத்திலும் ஆன்மிகப் பாதையைப் பின்பற்றினார், அதுவே அவரது சிறப்பு’’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், சுதந்திரப் போராட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் தியாகங்களைப் போற்றிய முன்னாள் பிரதமர் நேரு, முத்துராமலிங்கத் தேவரை முதல்வராக்கவும் விரும்பினார்.

இருப்பினும், முதல்வர் பதவியை மறுத்த முத்துராமலிங்கத் தேவர், நேதாஜிக்கு நீதி கிடைப்பதைத்தான் விரும்புவதாக நேருவிடம் கூறினார்’’ என்று சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Summary

Former PM Nehru wanted to make Muthuramalinga Thevar CM in recognition of his sacrifices to the freedom movement, Thevar had refused it: CP RadhaKrishnan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.