

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செங்கோட்டையன் செயல்படுவதாகக் கூறி, அவரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிக்கையில், கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கட்சியில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ செங்கோட்டையனை, இன்றுமுதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்’’ எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்திருந்தார்.
அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர், வியாழக்கிழமையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவுக்கு ஒன்றாகச் சென்ற நிலையில், இன்று செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, செய்தியாளர் சந்திப்பின்போது, அதிமுகவிலிருந்து தன்னை நீக்கிவிட்டால் மகிழ்ச்சி என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அதிமுகவிலிருந்து நீக்கம்! நாளை பேசுகிறேன்: செங்கோட்டையன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.