அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், மனுதாரா் குறிப்பிடும் பகுதி சதுப்பு நிலம் இல்லை. சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்ட எந்த அனுமதியும் வழங்கவில்லை. பட்டா நிலத்தில்தான் குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் வகையில், அதன் எல்லைகளை துல்லியமாக அளவிடும் பணி 2 வாரங்களில் முடிந்துவிடும். தற்போது கட்டப்படும் கட்டடத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படியே, சிஎம்டிஏ அனுமதி வழங்கியுள்ளது என்று வாதிட்டாா்.