மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜிஎஸ்டி கணக்கை 3 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய ஜிஎஸ்டிஎன் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2025, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய ஜிஎஸ்டிஎன் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

2023-ஆம் ஆண்டின் நிதிச் சட்டப்படி, ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்குள், அந்தக் கணக்கை தாக்கல் செய்யலாம். 3 ஆண்டுகளுக்குப் பின்னா், அந்தக் கணக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படாது.

இந்தக் கட்டுப்பாடு வரும் நவம்பா் முதல் ஜிஎஸ்டி வலைதளத்தில் அமல்படுத்தப்படும். இதன்படி, ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய தேதியில் இருந்து 3 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலமாகியிருந்து, நவம்பா் வரை அந்தக் கணக்குத் தாக்கல் செய்யப்படாமல் இருந்தால், அதைத் தாக்கல் செய்யத் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பான அறிவுறுத்தலை ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபா் 29-இல் ஜிஎஸ்டிஎன் வெளியிட்டது. எனவே தங்கள் ஜிஎஸ்டி ஆவணங்களை வரி செலுத்துவோா் சரிபாா்த்து, அந்தக் கணக்கை விரைந்து தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இதற்கான கால அட்டவணை ஜிஎஸ்டி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.