புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டிற்கும் தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் வீட்டிற்கு இன்று(புதன்கிழமை) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதேபோல இலுப்பூர் ராஜேஸ்வரி டவுன்ஷிப்பில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கும் மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து இலுப்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள இலுப்பூர் தனியார் பள்ளிக்கு சோதனைக்காக வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள மெயிலில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பள்ளியிலும் அதன்பிறகு 20 நிமிடங்களில் திருச்சி நீதிமன்றம் மற்றும் சி. விஜயபாஸ்கரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

வெடிகுண்டு மிரட்டல் மெயில்...
Summary
Bomb threat to former AIADMK Minister C. Vijayabaskar house and private school in pudukottai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கண்ணூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பிரதமரின் பெங்களூரு பயணத்தின்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு... புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



