இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு!

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெள்ளிக்கிழமை குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த நபர்கள், உடன் சென்ற இருவரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர்.

News image

ம. க. ஸ்டாலின்.

Updated On :5 செப்டம்பர் 2025, 4:02 pm IST

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெள்ளிக்கிழமை குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த நபர்கள், உடன் சென்ற இருவரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ம. க. ஸ்டாலின். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செயலராகவும் உள்ளார். வெள்ளிக்கிழமை ம. க. ஸ்டாலின் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரரென்று அங்கு வந்த கும்பல் ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

அவர் அலுவலகத்திற்குள் நுழையும் போது வீசியதால் அருகில் இருந்த ஜன்னல்களில் பட்டு கண்ணாடிகள் சிதறின. அலுவலக கதவும் சிதறியது. அதிர்ச்சியடைந்த ம.க. ஸ்டாலின் அலுவலகத்திற்குள் சென்று விட்டார். பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், ம. க. ஸ்டாலினுடன் சென்ற இளையராஜா, அருண் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

Story image

தகவல் கிடைத்ததும் திருவிடைமருதூர் காவல் கோட்ட துணைக்கண்காணிப்பாளர் கே. ராஜூ சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் குண்டு வெடித்த இடத்தை பார்வையிட்டார். ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை குண்டு வீசி கொலை செய்ய முயன்ற போது சிதறிய கதவு மற்றும் கண்ணாடி.

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை குண்டு வீசி கொலை செய்ய முயன்ற போது சிதறிய கதவு மற்றும் கண்ணாடி.

Summary

Unidentified gang hurled a petrol bomb at the aduthurai town panchayat office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.