இலங்கையில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரத்தின் அருகில் வெல்லவாயா பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது நேற்று (செப்.4) இரவு பயணிகள் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சுமார் 1,000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், 15 பேர் சம்பவயிடத்திலேயே பலியான நிலையில், 5 குழந்தைகள் உள்பட 16 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, இலங்கையில் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்றது. இதனால், பெரும்பாலான மலைகளின் மீது செல்லும் வாகனங்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.
Summary
15 passengers reported dead after bus overturns in Sri Lanka
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜபல்பூர் எச்சரிக்கை!

இந்தோனேசியாவில் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

ஜம்மு-காஷ்மீரில் மலைச் சரிவில் உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 21 போ் உயிரிழப்பு

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


