திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே இன்று அதிவேக சோதனை ஓட்டம்

ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே புதிய மின்மயமாக்கப்பட்ட பிரிவில் ஆய்வும், ரயில் அதிவேக சோதனை ஓட்ட பரிசோதனையும் சனிக்கிழமை (செப். 13) நடைபெறும் என்றும், அதனால் மக்கள் ரயில் பாதையைக் கடக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :12 செப்டம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே புதிய மின்மயமாக்கப்பட்ட பிரிவில் ஆய்வும், ரயில் அதிவேக சோதனை ஓட்ட பரிசோதனையும் சனிக்கிழமை (செப். 13) நடைபெறும் என்றும், அதனால் மக்கள் ரயில் பாதையைக் கடக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை விடுத்த செய்தி:

ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே ரயில் பாதை புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதை தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மின்பொறியாளா் கணேஷ், சனிக்கிழமை (செப். 13) ஆய்வு மேற்கொள்கிறாா். சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை ராமேசுவரம் - ராமநாதபுரம் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.

எனவே, ராமேசுவரம் - ராமநாதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதைகளுக்கு அருகில் செல்லவோ, உரிய அனுமதி இன்றி ரயில் பாதையைக் கடக்கவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.