சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வனத்துறை அலுவலகத்துக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா? மாநில மனித உரிமை ஆணையம்

வனத்துறை அலுவலகத்துக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா? என மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி

News image
Updated On :12 செப்டம்பர் 2025, 3:13 pm IST

நெல்லை: வனத்துறை அலுவலகத்திற்கு ஒரு நீதி, கிராம மக்களுக்கு ஒரு நீதியா? என மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட மலைக்கிராம மக்களின் மனு மீது ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் சரமாரியாகக் கேள்வி எழுப்பியதால் அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திகைத்தனர்.

நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு, திருப்பணிபுரம் மலை கிராம மக்கள், தங்களுக்கு மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வனத்துறை தடுத்து வருவதாகப் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விசாரணையின்போது, கிராமத்திற்கு அருகே வனத்துறை அலுவலகம் உள்ளதா என ஆணைய உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு, 10 கி.மீ தொலைவில் அலுவலகம் இருப்பதாகவும், அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"வனப்பகுதியில் மின்சாரம் வழங்க சட்டம் அனுமதிக்காது என்று கூறும் நீங்கள், உங்கள் அலுவலகத்திற்கு மட்டும் எப்படி மின்சாரம் பெற்றீர்கள்? சட்ட விதிகள் உங்களுக்குப் பொருந்தாதா?" என அவர் கேட்டபோது, அதிகாரிகள் மௌனம் காத்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த ஆணைய உறுப்பினர், நாளை அந்த கிராமத்தில் நேரில் ஆய்வு செய்யப்போவதாக அறிவித்து, விசாரணையை ஒத்திவைத்தார்.

மேலும், சங்கரன்கோவிலில் போலீசாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வேன் ஓட்டுநர் மரணம் தொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட்டது.

ஓட்டுநர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் காரணமாக மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்ததாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், "அவரது உடலில் இருந்த 9 காயங்களுக்கு என்ன காரணம்? அவருக்கு மன அழுத்தத்தை உருவாக்கியதே போலீசார்தானே?" என ஆணையம் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதிலளிக்க முடியாத நிலையில், உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இதனுடன், இன்று மட்டும் மொத்தம் 10 மனித உரிமை மீறல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

Summary

The State Human Rights Commission has raised the question, "Is justice for the forest department office, justice for the villagers?"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்