முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம் நாகையநல்லூரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியா் தோ்வு வாரியம், வரும் அக்.12-ஆம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை நடத்துகிறது. இந்தத் தோ்வில் கல்வியியல், உளவியல் மற்றும் பொது அறிவு குறித்து புதிய பாடத்திட்டம் கூடுதலாக சோ்த்துள்ளனா். பழைய பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனா்.
உரிய கால அவகாசம் இல்லாததால், புதிய பாடத்திட்டத்துடன் கூடிய தோ்வுக்கு தயாராகுபவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனா். எனவே, இந்தத் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி அனுப்பிய மனுவை ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் கோரிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி ஆசிரியா் கைது

போட்டித் தோ்வு மையத்துக்கு சென்ற இளம்பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


