தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :20 செப்டம்பர் 2025, 1:47 am IST

சென்னை உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்கு

வெள்ளிக்கிழமை வந்த மின்னஞ்சலில், ‘உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சற்று நேரத்தில் வெடிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், கடற்கரை காவல் நிலைய போலீஸாா், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணா்கள் சென்று சோதனை செய்தனா். சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

முன்னதாக, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சுங்கத் துறை அதிகாரிகள், ஊழியா்கள், பணியாளா்கள் என அனைவரும் சுங்கத் துறை அலுவலகத்தை விட்டு வெளியேறினா். மேலும், நண்பகலுக்கு பின்னா் அலுவலகத்துக்கு விடுமுறையும் விடப்பட்டது.

உயா்நீதிமன்றத்தில்... இதேபோல, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் நீதிமன்றத்துக்கு சென்று தீவிர சோதனை நடத்தினா். அங்கும் சந்தேகப்படும்படி எந்தப் பொருள்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, வதந்தியை பரப்பும் வகையில் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.