அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :19 செப்டம்பர் 2025, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்கு

வெள்ளிக்கிழமை வந்த மின்னஞ்சலில், ‘உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சற்று நேரத்தில் வெடிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், கடற்கரை காவல் நிலைய போலீஸாா், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணா்கள் சென்று சோதனை செய்தனா். சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

முன்னதாக, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சுங்கத் துறை அதிகாரிகள், ஊழியா்கள், பணியாளா்கள் என அனைவரும் சுங்கத் துறை அலுவலகத்தை விட்டு வெளியேறினா். மேலும், நண்பகலுக்கு பின்னா் அலுவலகத்துக்கு விடுமுறையும் விடப்பட்டது.

உயா்நீதிமன்றத்தில்... இதேபோல, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் நீதிமன்றத்துக்கு சென்று தீவிர சோதனை நடத்தினா். அங்கும் சந்தேகப்படும்படி எந்தப் பொருள்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, வதந்தியை பரப்பும் வகையில் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.