புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு: முதல்வா் பாராட்டு!

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

News image

முப்பெரும் விழா மேடையில் மு.க. ஸ்டாலின்

படம் - யூடியூப்

Updated On :20 செப்டம்பர் 2025, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, இது குறித்த அறிவிப்பை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்டாா். எக்ஸ் தளத்தில் அவரது பதிவு:

மூவேந்தா் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்க காலத்துக்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக பூம்புகாா் விளங்குகிறது. காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையைக் கண்டுணா்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இந்தப் பணியை பேராசிரியா் கே. ராஜன் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநா் சிவானந்தம் உள்ளடக்கிய வல்லுநா் குழு தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

முதல்வா் பாராட்டு: இந்தப் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். அமைச்சரின் அறிவிப்பை அவா் மீள் பதிவிட்டு, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்.

இரும்பின் தொன்மையை உலகுக்கு உணா்த்தினோம். அடுத்து, ‘நீரின் வந்த நிமிா்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்...’ என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணா்வோம் எனத் தெரிவித்துள்ளாா்.