நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டம்: சாலைவலம் வரும் முதல்வர் ஸ்டாலின்

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தைத் தொடங்கி வைக்க சாலைவலமாக வருகிறார் முதல்வர் ஸ்டாலின்

News image

சாலைவலம் வரும் ஸ்டாலின்

Updated On :20 செப்டம்பர் 2025, 12:23 pm IST

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.

செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரையிலும் ரூ. 66.78 கோடியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் அமைக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில் இன்று திறந்து வைக்கப்படவிருக்கிறது.

பூந்தமல்லி பகுதியில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில், சென்னை மாநகருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 1,180 மில்லியன் லிட்டர் குடிநீருடன் கூடுதலாக செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, செம்பரம்பாக்கம் பகுதியில் சாலைவலம் வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் சாலையின் இருபுறமும் நின்று வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் சென்னை மாநகருக்கு கொண்டு செல்வதற்காக பிரதான குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பகுதி செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து போரூா் வரை 11.7 கி.மீ. நீளத்துக்கும், பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பிலிருந்து கோயம்பேடு வரை 9.2 கி.மீ. நீளத்துக்கும் இரண்டாவது பிரதான குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் நாள்தோறும் வழங்க முடியும். இதற்காக செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தின் முழு அளவான நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படும். இதன் மூலம் அம்பத்தூா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிகளில் உள்ள பொது மக்களும் பயன்பெறவிருக்கின்றன.

Summary

Tamil Nadu Chief Minister M.K. Stalin has arrived to inaugurate a project to provide an additional 265 million liters of purified drinking water from the Chembarambakkam Water Treatment Plant.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.