கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

உங்கள் அப்பா ஊரில் அடிப்படை வசதிகூட இல்லை: திருவாரூரில் விஜய்

திருவாரூருக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

திருவாரூரில் விஜய்

Published On :

திருவாரூருக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தவெக தலைவர் விஜய் பேசுகையில்,

``திருவாரூர் தேர் என்றால் சும்மாவா? ரொம்ப நாளாக ஓடாத தேரை ஓட்டியது யாரென்று மார்தட்டிச் சொன்னது யாரென்று உங்களுக்குத் தெரியும்?

திருவாரூரில் விஜய்

திருவாரூரில் விஜய்

ஆனால், அவருடைய மகன், நன்றாக ஓடவேண்டிய தேரை நாலாபுறமும் தடுத்து நிறுத்தி விட்டார்.

திருவாரூர், அவர்களின் ஊர் என்று பெருமையாகச் சொல்கிறார்கள்; ஆனால், திருவாரூர் இங்கு கருவாடாகக் காய்கிறது

எல்லா இடத்துக்கும் உங்கள் பெயரை வைக்கிறீர்கள், ஆனால், உங்கள் அப்பா பிறந்த இந்த திருவாரூரில் அடிப்படை சாலை வசதிகூட இல்லை.

இங்கிருக்கும் பல்கலைக் கழகத்தில் எல்லா துறைகளும் இருக்கிறதா? இருக்காது. இங்கிருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கே வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கு. திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு சாலை இல்லை.

இந்த மாவட்டத்தின் அமைச்சர் ஒருவரின் வேலை, முதல்வர் குடும்பத்துக்கு வேலை செய்வதுதான்’’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, நாகையில் பிரசாரம் மேற்கொண்டிருந்த விஜய், திருவாரூர் பிரசாரத்தின்போது பச்சைத் துண்டை அணிந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.