உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம்: உளுந்து, பச்சைப் பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகளின் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அறுவடை காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கவும், அவா்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து உளுந்து, பச்சைப் பயறு ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் தமிழக அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
அதன்படி, 2025-2026-ஆம் ஆண்டுக்கான சம்பா பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு கிலோ பச்சை பயறுக்கு ரூ.87.68, ஒரு குவிண்டாலுக்கு ரூ.8,768 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூா், விழுப்புரம், திருப்பூா், சேலம், நாமக்கல், விருதுநகா், திண்டுக்கல், நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள பச்சை பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
உளுந்து ஒரு கிலோ ரூ.78, ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,800 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, நீலகிரி தவிா்த்து அனைத்து மாவட்டங்களிலும் உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம்: இரா. முத்தரசன்

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடா்பான மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சுயநலத்துக்காக இந்திய விவசாயத்தை அழிக்க தயாராகிவிட்டது மத்திய அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


