
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் பலியான நிலையில், தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில், சனிக்கிழமையில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 39 பேர் பலியான நிலையில், தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய 4 பிரிவுகளின்கீழ் தவெக நிர்வாகிகள் மீது கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, அவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரூர் விரைந்து சென்று, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.