தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

கரூர் பலி: நீதிமன்றம் விசாரிக்க தவெக கோரிக்கை?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க தவெக முறையிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்

News image
Updated On :28 செப்டம்பர் 2025, 6:11 am

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க தவெக முறையிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபானி இல்லத்தில் தவெகவினர் முறையீடு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அடுத்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணத்திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Summary

TVK requests for a court investigation about Karur Stampede: Sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.