அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன் என்று பாஜக மாநில துணைத்தலைவரும், பிரபல நடிகையுமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டியில், எனது கணவரான சுந்தர்.சி எனது அரசியல் வாழ்க்கையில் பின்புலமாக இருந்தவர். அவர் தற்போது நேரடி அரசியலில் களம் காண்கிறார். அவருக்கு என்னுடைய அறிவுரை தேவையில்லை. தேர்தல் களத்தில் போட்டி இருக்க வேண்டியது அவசியம். வெற்றி சுலபமாக கிடைத்தால் அதனை ரசிக்க முடியாது.
மக்கள் நல்லது செய்பவர்களுக்கு தான் ஆதரவாக இருப்பார்கள். பாரம்பரிய அரசியல்வாதி என்பதற்காகவும், குடும்ப அரசியல்வாதி என்பதற்காகவும் மக்கள் வாக்களிக்கும் காலம் போய்விட்டது. அண்ணாமலை போட்டியிடாதது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது, அது மேலிட உத்தரவு, அதுகுறித்து அவர்தான் பேசவேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் திமுக இடையில்தான் போட்டி. தம்பி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். அவர் குறித்து மே 4 தேதிக்கு பிறகு பேசலாம். அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன். மத்திய தொகுதியில் நிறைவேற்றாத திட்டங்கள் பிரசனைகள் நிறைய உள்ளன. அனைத்திற்கும் தீர்வு காண்போம் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை

விஜய் மனதில் பாஜகதான் உள்ளது: குஷ்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


