பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்!

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்...

Premalatha Vijayakanth Files Nomination in Virudhachalam

பிரேமலதா விஜயகாந்த் - x / Premallatha Vijayakant

Published On :

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று(ஏப். 6) முக்கிய தலைவர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரேமலதா கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் இதே விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகர் விருதுநகரில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் பல்லாவரம் - அனகை டி.முருகேசன், திருத்தணி- டி.கிருஷ்ணமூர்த்தி, ஓமலூர் - ஏ.ஆர்.இளங்கோவன், தருமபுரி- வி.இளங்கோவன், குடியாத்தம்(தனி) - கே.பி.பிரதாப், சேலம் மேற்கு- அழகாபுரம் மோகன்ராஜ், போளூர் - சரவணன், மயிலம்-வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Premallatha Vijayakant Files Nomination in Virudhachalam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.