மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!

எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாக ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்தது குறித்து....

News image

ஆதவ் அர்ஜுனா - படம்: தவெக ஐடி விங்

Updated On :12 ஏப்ரல் 2026, 12:52 pm IST

எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாகவும், அவர் தவெகவின் கருப்பு ஆடு என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.

தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலரும், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் பகுதியில் இன்று(ஏப். 12) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதிலளித்துப் பேசியதாவது:

திமுக இரண்டாவது முறையாக வெற்றியடைந்த வரலாறே இல்லை, எதாவது ஒரு சக்தி அவர்களின் வெற்றியைத் தடுத்து நிறுத்தும், அப்படியொரு புதிய சக்தியாக எங்களுடைய தலைவர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.

வில்லிவாக்கம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் இல்லை, எம்எல்ஏவும் வெளியே வருவதும் இல்லை.

கொளத்தூர் வரும் முதல்வர், வில்லிவாக்கத்துக்கு வருவது இல்லை, ஆனால் தற்போது முதல்வரின் மகன் உதயநிதி, மருமகன் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமே வில்லிவாக்கத்தில் இருக்கிறது.

தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் பெரம்பூர், வில்லிவாக்கத்தில் தவெகவை வெல்ல வேண்டும் என்பதற்காக பணமூட்டைகளைக் கொண்டுவந்துள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

மதச்சார்ப்பற்ற கொள்கையிலும் சமூக நீதி கொள்கையிலும் உறுதியாக இருப்பதால் 233 தொகுதிகளிலும் தனிப்பெரும்பான்மையுடன் தவெகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டார், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் கருப்பு ஆடு. பழனிசாமி கொடுத்த பணத்துக்கு எடப்பாடி தவெக வேட்பாளர் விலை போய்விட்டார்.

எடப்பாடி தொகுதியில் பழனிசாமிக்கு கடும் போட்டியை கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் யாருக்கு ஆதரவு என்பதை தலைவர் முடிவு செய்வார்.

Summary

Tvk functionary Aadhav Arjuna has criticized the party's candidate for the Edappadi constituency, alleging that he has committed an act of betrayal and is the "black sheep" of TaVeKa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.