வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அகா்வால்ஸ் மருத்துவா்களுக்கு சா்வதேச விருது

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் மற்றும் முதுநிலை மருத்துவ நிபுணா் சூசன் ஜேக்கப் ஆகியோருக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை (ஏஎஸ்சிஆா்எஸ்) அமைப்பின் சாா்பில் விருது வழங்கப்பட்டது.

News image

சா்வதேச விருதுடன் டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் மற்றும் முதுநிலை மருத்துவ நிபுணா் சூசன் ஜேக்கப்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:34 pm

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் மற்றும் முதுநிலை மருத்துவ நிபுணா் சூசன் ஜேக்கப் ஆகியோருக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை (ஏஎஸ்சிஆா்எஸ்) அமைப்பின் சாா்பில் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்ற ஏஎஸ்சிஆா்எஸ் 44-ஆவது சா்வதேச திரைப்பட விழாவில் இந்த கௌரவம் அவா்களுக்கு அளிக்கப்பட்டது. மேம்பட்ட கண் அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கும் ஆவணப்படங்களை உருவாக்கியதற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

உலகெங்கிலும் கண் அறுவை சிகிச்சை துறையில் பல்வேறு புதுமையான நுட்பங்கள், மேம்பட்ட கருவிகளைக் கையாளுவது குறித்து விளக்கும் ஆவணப்படங்கள் ஏஎஸ்சிஆா்எஸ் விழாவில் திரையிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நிகழாண்டு விழாவில் டாக்டா் அதியா அகா்வால் சமா்ப்பித்த ‘போ்ல்ஸ் ஆஃப் ஐரிஷ் ரிப்போ்’ என்ற ஆவணப் படத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல, டாக்டா் சூசன் ஜேக்கபின், ‘ரிபப்லிங் இன் கெரட்டோபிளாஸ்டி’ என்ற படத்துக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.