மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரணம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

பட்டாசு ஆலை வெடி விபத்து நேர்ந்த இடத்தில் தீயை அணைக்கும் வீரர்கள் - எக்ஸ்

Updated On :20 ஏப்ரல் 2026, 4:32 pm

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா இன்று (ஏப். 20) அறிவித்துள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (ஏப். 19) பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டது.

பட்டாசு மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மருந்து உராய்வு காரணமாக வெடி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அருகருகே இருந்த 4 அறைகளும் இடிந்து தரைமட்டமாகின.

அறைக்குள் குறுகிய இடத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் பணிசெய்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபத்தில், 25 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மீண்டும் பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசு சார்பிலும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என, சம்பவ இடத்தை ஆய்வு செய்த பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Virudhunagar Firecracker Factory Accident: Relief for Families of Victims

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.